KaniPrakash M ( JKPATC ):
தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பை எதிர் கொள்ள முடியாமல்.. தங்களுடைய பாதிப்பை பெரியதாக கருதி தற்கொலை செய்து கொள்கிறார்கள் .
நாம்..
ஜோதிட ரீதியான காரணங்கள் கிரக நிலைகளை ஆராய்வோம் . ஜாதகத்தில்
மூன்றாம் பாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது . மூன்றாம் பாவத்தின் மூலம் மனநிலையை அறியலாம் .
மனம் செயல்படும் விதம், மனதைரியம் , மன அலைகள் , மனம் எடுக்கும் முடிவுகள் பற்றி மூன்றாம் பாவமும் ,
அதன் அதிபதியின் நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் .
3 ஆம் அதிபதி பகை நீச்சம் பெற்றிருந்தாலும் ,
3 ல் ராகு , கேது , சனி , மாந்தி , பகை கிரகம் , நீச்சகிரகம் இருந்தாலும்
ஜாதகர்க்கு மனோ தைரியம் குறையும் ,
நல்ல எண்ணங்கள் இருக்காது . சிந்தனைகளின் முடிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் .
இவர்களுடைய திசாபுக்திகள் நடைமுறைக்கு வந்தால் தவறான முடிவுக்கு சொல்வார்கள் .
தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் , அற்பமாய் ஆயுளை முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொள்ள மனம் துடிக்கும் .
ஜாதகத்தில் கெட்ட கிரக திசாபுத்திகள் நடப்பில் இருக்க வேண்டும்
அவ்வாறு கெட்ட திசாபுக்திகளை அறிந்து கொண்டால் அதிலிருந்து விடுபட முயற்சிக்கலாம்
1.8 ஆம் வீடுகள் மூலம் ஆயுளின் காலத்தை அறியலாம் .
ஜாதகத்தில் 1,7 ம் வீடுகளின் ஆய்விலிருந்து தற்கொலை நிலைகளை அளவிட முடியும் .
லக்கினத்திற்குத் முக்கிய பங்கு உள்ளது .
கிரக நிலைகள்
✍ லக்கினம்..
செவ்வாய் , சனி , ராகு , கேது ஆகிய கிரக நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் .
✍) லக்கினத்தில் செவ்வாய் , சனி , ராகு , கேது மாந்தியிருந்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் ,
✍ ) லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரகநட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும் ,
✍ ) லக்கினம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்திப்பில் லக்கினம் ராசி அமைந்திருந்தால் பலம் குறைந்து காணப்படும் .
✍ ) லக்கினம் நின்ற ராசிகளில் கிரகயுத்தம் இருப்பினும் லக்னப்பாதிப்பு அடையக்கூடும் .
✍ ) லக்கினாதிபதி பகை நீசம் பெறுவதும் , லக்கினாதிபதி பகை கிரகங்களுடன் இருப்பதும் லக்கினாதிபதி வலு குறைந்திருப்பது மற்றும் லக்னாதிபதி 6 , 8 , 12 ல் மறைந்து இருப்பதும் .
✍)
லக்னம் பலம் குறைந்து 6 - 8 - 12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தாலும்,
லக்கினத்தில் 6 - 8 - 12-ஆம் அதிபதிகள் தனித்தனியே அல்லது சேர்ந்திருந்தாலும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பை தரும்.
பல துன்பங்கள் நோய் பாதிப்பும் ஏற்படுத்தும்.
✍ ) சனி , செவ்வாய் குருவை சூரியனை , சந்திரனை பார்க்கப் பெறுதல் ,
✍ ) சூரியனும் , சந்திரனும் சனியால் பாதிப்படைய லக்கினாதிபதியான இயற்கை சுபக்கிரகம் 11 ல் ராகு ( அ ) கேதுவுடன் அமைந்திருத்தல்
✍ ) சுக்கிரன் , குரு புதன் 6 , 8 , 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் அற்பாயுள்.
✍ ) சனி சந்திரனுக்கு 8 ல் நின்றால் அந்த ஜாதகனுக்கு அதிக துன்பம் ஏற்படும்.
தற்கொலை செய்து கொள்வதற்கு எண்ணம் ஏற்படும் .
பொருள் நிலமும் நஷ்டமாகும் . அரச தண்டளை கிடைக்கும் .
லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் மேல் கூறிய துன்பங்கள் விலகி சுப பலன்கள் ஏற்படும் .
✍) மேஷம் அல்லது விருச்சிகமாகிய ராசிகளிலொன்று லக்கினமாக இருக்க,
இந்த லக்கினத்திற்கு 6-ல் அல்லது 8-ல் பாவிகள் இருந்தால் விஷத்தால் மரணம் ஏற்படும் .
✍ ) லக்னத்தில் செய்வால் , சனி , ராகு , கேது நின்று இவர்களுடன் மாந்தி இணைந்து..
தசாபுத்தி நடத்தினால் பல்வேறு பிரச்சினைகளால் மனம் பலவீனம் பெற்று பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
✍) மாந்தியோடு இணைந்த எந்த கிரக திசாபுத்தி நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்யத் தோன்றும்.
✍ ) லக்கினத்திற்கு பாதகமானவர்களின் பாவாதிபதி திசாபுத்தி காலத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது .
✍ ) தசாநாதன் , பகை , நீசம் பெற்றும் கிரகயுத்தம் பெற்றும் திசாபுத்தி நடத்தினாலும் வாய்ப்புள்ளது .
✍ ) தசாநாதன் 6,12 ல் நின்று தசாபுத்தி நடத்தக்கூடாது .
✍ ) தசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6,8,12 ம் பாவாதிபதிகளுடன் இணைவு பெற்றிருக்கக்கூடாது .
மேல்கண்ட அமைப்புகள் உடைய ஜாதகரை,
எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் . இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது .
நல்ல எண்ணங்களையும் , சிந்தனைகளையும் இவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
✍ )
உடல் காரகனாகிய சந்திரனுக்கும் ,
உயிர் ஸ்தானமாகிய லக்கினத்துக்கும்..
3 ம் அதிபதியுடன் சனி இணைந்து ஏதாவது ஓர் ராசியில் இருந்தால் ,
இவர்களது தசாபுத்திக் காலங்களில் ஜாதகர் விஷம் சாப்பிட்டு தனது உயிரைமாய்த்துக் கொள்வார் .
இவர்களுடன் ராகு இணைந்தாலும் , சுருக்குமாட்டித் தற்கொலை செய்து கொள்வார்கள்.
✍ ) லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்ந்து ஏதாவது ஒரு ராசியில் இருந்து இவர்களின் தசா புத்தியில் விஷம் சாப்பிட்டு தன்னுயிரை தான மாய்த்துக் கொள்வார்கள் .
✍) ராகு இவர்களுடன் சேர்ந்திருந்தால் கயிற்றில் தன்னுயிரை மாய்த்துக் கொள்வார்கள் .
✍✍✍✍
மேஷம் லக்கினம் புதன் சனி
✍
ரிஷபம் லக்கினம் சந்திரன் சனி
✍
மிதுனம் லக்கினம் சூரியன் சனி
✍
கடகம் லக்கினம் புதன் சனி
✍
சிம்மம் லக்கினம் சுக்கிரன் சனி
✍
கன்னி லக்கினம் செவ்வாய் சனி
✍
துலாம் லக்கினம் குரு சனி
✍
விருச்சிகம் லக்கினம் ராகு சனி
✍
தனுசு லக்கினம் ராகு சனி
✍
மகரம் லக்கினம் குரு சனி
✍
கும்பம் லக்கினம் செவ்வாய் சனி
✍
மீனம் லக்கினம் சுக்கிரன் சனி
லக்கினத்திற்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்க்கை பெற்றிருந்து இவர்களின் திசாபுத்தி நடந்தால் உடல் & உயிருக்கும் பாதிப்பை தரும்.
கோச்சார நிலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
✍ )
லக்கினாதிபதியும்
ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க
இவர்களுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதிகமான மருந்தை சாப்பிட்டு மரணத்தை அடைவர்கள்.
✍) லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க இவர்களுடன் சனி சேர்ந்தால்.
தண்ணீரால் மரணத்தை அடைவர்கள்.
✍ )
ஐந்தாம் அதிபதி,
மூன்றாம் அதிபதி, லக்கினாதிபதி
மூவரும் சேர்ந்து இவர்களுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு மரணத்தை அடைவார்கள்.
✍ )
மகரம் மற்றும் கும்பம் நான்காம் வீடாக அமைந்து அதில் சந்திரன் இரண்டு பாவிகளுடன் இருந்தால்..
கயிற்றில் தூக்குப் போட்டடு இறந்து விடுவான்.

