யூடியூப் லிங்க்...
https://youtu.be/i_cUQ4NVNL0
Kaniprakash M
80562 45107
செவ்வாய் ( லக்ன பாவ ஆரம்ப
முனை) தான் நின்ற நட் சனி
உபநட் சனி மூலம்
பாவத்தொடர்பு 2,6,8,12
எனவே ஜாதகருக்கு சதை
பகுதிகளிலும், தோள்பட்டை
மற்றும் கைகளில் தாங்க
முடியாத வலி வேதனையைக்
கொடுத்தது. காரணம் செவ்வாய்
நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம்
வலிக்கு காரணமான சனி ஆகும்.
எந்த எந்த பாவங்கள்தான்
நின்ற நட், உபநட் மூலம் 6ம் பாவ
தொடர்புகொள்கிறதோ,
மேற்கண்ட பாவங்களின்
பாவக்காரக மூலம் நோய் வரும்.
2, 4, 6, 8, 12ம் பாவங்கள் 6ம் பாவ
தொடர்பு பெறும் போது.
மேலும் எந்த எந்த கிரகங்கள்
தான் நின்ற நட்சத்திரம், உப
நட்சத்திரம் மூலம் 6ம் பாவத்
தொடர்பு பெறுகின்றதோ,
மேற்கண்ட கிரகங்களின்
கிரக காரக மூலம் ஜாதகருக்கு
நோய் வரும்.
உதாரணமாக..
அஸ்வினி நட்சத்திரத்தின்
காரக தண்மைகள்
அஸ்வினி
🟡🔵🟢🔵🟢🔵
1. மூன்று குதிரை முகம்
2. அஸ்வினி தேவர்கள்
3. ஆண்
4. தேவகணம்
5. கொக்கு
6. என்னை
7. பெடல்
8. கிரீடம்/ ஹெல்மெட்
9. முடி திருத்தகம்
10. நெத்திச்சுட்டி
11. கூரை ஓடு
12. கொடிமரம்
13. தலைப்பகுதி
14. மூளை
15. மரத்தின் உச்சி
16.தலையின் முடி
17. மொட்டை மாடி
18. கத்தரிக்கோல்
19. ரேஸ் மைதானம்
20. தலைநகரம்
21. சீப்பு
22. தொப்பி
23. ஸ்டார் செய்தல்
24. பிரசவம்
25. ஆரம்ப விழா
26. சரஸ்வதி
27. கொள்ளு
28.எட்டு
29.புஷ்பம்
30.முக்காடு
31. மலைச்சிகரம்
32. விசிறி
33. புகை போக்கி
34. மின் விளக்கு
35. சூரிய ஒளி
36. டாக்டர்கள்
37. கிழக்கு திசை
38. பிரம்மா
39. கோழி முட்டை
40.குழாய்
41. கோபம்
42. மோட்டார் பம்புசெட்
43. வெளியேறுதல்
44.மயக்கம்
45. சபதம்
46. தேன்
47. செயல்
48.சிந்தனை
49.வளர்ச்சி
50.ஆயுள்
✍✍✍✍
தகவல் தொடர்பு துறையில் பணி:-
முதலில் உத்யோகம் செய்ய கொடுப்பினை உள்ளதா என்பதற்கு 6 ம் பாவத்தை ஆய்வு செய்ய வேண்டும்.
6 ம் பாவ உ.ந ராகு
ராகு 6 ம் பாவத்துக்கு உப உப நட்சத்திரமாகவும் உள்ளார். எனவே 6 ம் பாவத்தின் வலிமை 85%
கிரகம் ந.அ உ.ந உ.உ.ந
ராகு சந் சந் புதன்
2,6,10 1 1 4,5,12
ராகு நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் இரண்டும் ஒரே கிரகமாக இருந்தால்..
நட்சத்திர சம்பவம் தொடர்வதை உப உப நட்சத்திரமே முடிவு செய்யும் என்பது விதி.
எனவே
ராகு 2,4,6,10,12 தொடர்பு பெற்று சிறப்பாக உள்ளார்.
தகவல் தொடர்பு துறைக்கு
3 ம் பாவத்தை பார்க்க வேண்டும்.
3 ம் பாவ உ.ந சுக்கிரன்
3 ம் பாவத்துக்கு உப நட்சத்திரமாக வந்த சுக்கிரன்,
லக்ன பாவத்துக்கும்,
இறை கொடுப்பினையை குறிக்கும்..
9 ம் பாவத்துக்கும்
உப நட்சத்திரமாக உள்ளார்.
கிரகம் ந.அ உந உஉந
சுக் சனி சனி சனி
1,3,7,9 3,7,11 3,7,11 3,7,11
= 1,3,7,9,11 தொடர்பு பெற்று
3 ம் பாவத்துக்கு சாதகமாக உள்ளது.
9 ம் பாவத்தை கட்டுப்படுத்தும் 3 ம் பாவமும் உடன் இருப்பதால் 10 ம் பாவத்துக்கு 45% சாதகமாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.
லக்ன பாவத்துக்கும்,
9 ம் பாவத்துக்கும்
1,3,7,9,11 தொடர்பு சாதகமே.
அடுத்து
கிரக காரகன் புதனை ஆய்வு செய்ய வேண்டும்
கிரகம் ந.அ உ.ந
புதன் சனி குரு
4,5,12 3,7,11 4,8,12
= 3,5,7,11 தொடர்பு மத்திம நிலையில் சாதகமாக உள்ளது.
( 5 ம் பாவத்தை உடனிருக்கும் 11 ம் பாவம் Control செய்யும்)
( சந்திரன் தசாநாதனாக இருப்பதால் தன் சொந்த நட்சத்திரத்திலும், புத்திநாதன் ராகுவின் உப நட்சத்திரலும் இருப்பார் என்ற விதிப்படி)
கிரகம் ந.அ உ.ந
சந் = சந் ராகு
1 1 2,6,10
= 1,2,6,10
புத்தி நாதன் ராகுவின் தொடர்பு~
கிரகம் ந.அ உ.ந உஉந
ராகு சந் சந் புதன்
2,6,10 1 1 4,5,12
ராகு நின்ற நட்சத்திரம், உப நட்சத்திரம் இரண்டும் சந்திரனாக இருப்பதால் நட்சத்திர சம்பவம் தொடர்வதை உப உப நட்சத்திரம் புதனே தீர்மானிக்கும்.
அதன்படி ராகுவின் தொடர்பு 2,4,6,10,12.
வேலையில் சேர்வதற்கு தசா புக்தி சாதகமாக இருந்தது.
தசா புத்தி சாதகமாக இருந்தது.
KaniPrakash M ( JKPATC ):
தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியான பாதிப்பை எதிர் கொள்ள முடியாமல்.. தங்களுடைய பாதிப்பை பெரியதாக கருதி தற்கொலை செய்து கொள்கிறார்கள் .
நாம்..
ஜோதிட ரீதியான காரணங்கள் கிரக நிலைகளை ஆராய்வோம் . ஜாதகத்தில்
மூன்றாம் பாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது . மூன்றாம் பாவத்தின் மூலம் மனநிலையை அறியலாம் .
மனம் செயல்படும் விதம், மனதைரியம் , மன அலைகள் , மனம் எடுக்கும் முடிவுகள் பற்றி மூன்றாம் பாவமும் ,
அதன் அதிபதியின் நிலையைத் தெரிந்து கொள்ள முடியும் .
3 ஆம் அதிபதி பகை நீச்சம் பெற்றிருந்தாலும் ,
3 ல் ராகு , கேது , சனி , மாந்தி , பகை கிரகம் , நீச்சகிரகம் இருந்தாலும்
ஜாதகர்க்கு மனோ தைரியம் குறையும் ,
நல்ல எண்ணங்கள் இருக்காது . சிந்தனைகளின் முடிவுகள் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும் .
இவர்களுடைய திசாபுக்திகள் நடைமுறைக்கு வந்தால் தவறான முடிவுக்கு சொல்வார்கள் .
தற்கொலைக்கு முடிவு எடுக்கும் சூழ்நிலையும் , அற்பமாய் ஆயுளை முடித்துக்கொண்டு உலக வாழ்க்கையிலிருந்து விடுவித்துக் கொள்ள மனம் துடிக்கும் .
ஜாதகத்தில் கெட்ட கிரக திசாபுத்திகள் நடப்பில் இருக்க வேண்டும்
அவ்வாறு கெட்ட திசாபுக்திகளை அறிந்து கொண்டால் அதிலிருந்து விடுபட முயற்சிக்கலாம்
1.8 ஆம் வீடுகள் மூலம் ஆயுளின் காலத்தை அறியலாம் .
ஜாதகத்தில் 1,7 ம் வீடுகளின் ஆய்விலிருந்து தற்கொலை நிலைகளை அளவிட முடியும் .
லக்கினத்திற்குத் முக்கிய பங்கு உள்ளது .
கிரக நிலைகள்
✍ லக்கினம்..
செவ்வாய் , சனி , ராகு , கேது ஆகிய கிரக நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் .
✍) லக்கினத்தில் செவ்வாய் , சனி , ராகு , கேது மாந்தியிருந்தாலும் அல்லது இணைந்திருந்தாலும் ,
✍ ) லக்னத்திற்கு பாதகாதிபதியின் கிரகநட்சத்திர சாரத்தில் லக்னம் நின்று இருப்பதும் ,
✍ ) லக்கினம் ராசி தொடக்கத்தில் அல்லது முடியும் தருவாயில் அதாவது ராசி சந்திப்பில் லக்கினம் ராசி அமைந்திருந்தால் பலம் குறைந்து காணப்படும் .
✍ ) லக்கினம் நின்ற ராசிகளில் கிரகயுத்தம் இருப்பினும் லக்னப்பாதிப்பு அடையக்கூடும் .
✍ ) லக்கினாதிபதி பகை நீசம் பெறுவதும் , லக்கினாதிபதி பகை கிரகங்களுடன் இருப்பதும் லக்கினாதிபதி வலு குறைந்திருப்பது மற்றும் லக்னாதிபதி 6 , 8 , 12 ல் மறைந்து இருப்பதும் .
✍)
லக்னம் பலம் குறைந்து 6 - 8 - 12-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தாலும்,
லக்கினத்தில் 6 - 8 - 12-ஆம் அதிபதிகள் தனித்தனியே அல்லது சேர்ந்திருந்தாலும், ஜாதகருக்கு உடல் நிலையில் பாதிப்பை தரும்.
பல துன்பங்கள் நோய் பாதிப்பும் ஏற்படுத்தும்.
✍ ) சனி , செவ்வாய் குருவை சூரியனை , சந்திரனை பார்க்கப் பெறுதல் ,
✍ ) சூரியனும் , சந்திரனும் சனியால் பாதிப்படைய லக்கினாதிபதியான இயற்கை சுபக்கிரகம் 11 ல் ராகு ( அ ) கேதுவுடன் அமைந்திருத்தல்
✍ ) சுக்கிரன் , குரு புதன் 6 , 8 , 12 ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் அற்பாயுள்.
✍ ) சனி சந்திரனுக்கு 8 ல் நின்றால் அந்த ஜாதகனுக்கு அதிக துன்பம் ஏற்படும்.
தற்கொலை செய்து கொள்வதற்கு எண்ணம் ஏற்படும் .
பொருள் நிலமும் நஷ்டமாகும் . அரச தண்டளை கிடைக்கும் .
லக்னாதிபதி கேந்திரத்தில் இருந்தால் மேல் கூறிய துன்பங்கள் விலகி சுப பலன்கள் ஏற்படும் .
✍) மேஷம் அல்லது விருச்சிகமாகிய ராசிகளிலொன்று லக்கினமாக இருக்க,
இந்த லக்கினத்திற்கு 6-ல் அல்லது 8-ல் பாவிகள் இருந்தால் விஷத்தால் மரணம் ஏற்படும் .
✍ ) லக்னத்தில் செய்வால் , சனி , ராகு , கேது நின்று இவர்களுடன் மாந்தி இணைந்து..
தசாபுத்தி நடத்தினால் பல்வேறு பிரச்சினைகளால் மனம் பலவீனம் பெற்று பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
✍) மாந்தியோடு இணைந்த எந்த கிரக திசாபுத்தி நடப்பில் இருந்தாலும் தற்கொலை செய்யத் தோன்றும்.
✍ ) லக்கினத்திற்கு பாதகமானவர்களின் பாவாதிபதி திசாபுத்தி காலத்திலும் ஏற்படும் வாய்ப்புள்ளது .
✍ ) தசாநாதன் , பகை , நீசம் பெற்றும் கிரகயுத்தம் பெற்றும் திசாபுத்தி நடத்தினாலும் வாய்ப்புள்ளது .
✍ ) தசாநாதன் 6,12 ல் நின்று தசாபுத்தி நடத்தக்கூடாது .
✍ ) தசாநாதன் பகை கிரகங்களுடன் அல்லது 6,8,12 ம் பாவாதிபதிகளுடன் இணைவு பெற்றிருக்கக்கூடாது .
மேல்கண்ட அமைப்புகள் உடைய ஜாதகரை,
எப்போதும் கவனித்துக் கொண்டேயிருக்க வேண்டும் . இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடாது .
நல்ல எண்ணங்களையும் , சிந்தனைகளையும் இவர்களுக்கு உருவாக்க வேண்டும்.
✍ )
உடல் காரகனாகிய சந்திரனுக்கும் ,
உயிர் ஸ்தானமாகிய லக்கினத்துக்கும்..
3 ம் அதிபதியுடன் சனி இணைந்து ஏதாவது ஓர் ராசியில் இருந்தால் ,
இவர்களது தசாபுத்திக் காலங்களில் ஜாதகர் விஷம் சாப்பிட்டு தனது உயிரைமாய்த்துக் கொள்வார் .
இவர்களுடன் ராகு இணைந்தாலும் , சுருக்குமாட்டித் தற்கொலை செய்து கொள்வார்கள்.
✍ ) லக்கினத்திற்கு அல்லது ராசிக்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்ந்து ஏதாவது ஒரு ராசியில் இருந்து இவர்களின் தசா புத்தியில் விஷம் சாப்பிட்டு தன்னுயிரை தான மாய்த்துக் கொள்வார்கள் .
✍) ராகு இவர்களுடன் சேர்ந்திருந்தால் கயிற்றில் தன்னுயிரை மாய்த்துக் கொள்வார்கள் .
✍✍✍✍
மேஷம் லக்கினம் புதன் சனி
✍
ரிஷபம் லக்கினம் சந்திரன் சனி
✍
மிதுனம் லக்கினம் சூரியன் சனி
✍
கடகம் லக்கினம் புதன் சனி
✍
சிம்மம் லக்கினம் சுக்கிரன் சனி
✍
கன்னி லக்கினம் செவ்வாய் சனி
✍
துலாம் லக்கினம் குரு சனி
✍
விருச்சிகம் லக்கினம் ராகு சனி
✍
தனுசு லக்கினம் ராகு சனி
✍
மகரம் லக்கினம் குரு சனி
✍
கும்பம் லக்கினம் செவ்வாய் சனி
✍
மீனம் லக்கினம் சுக்கிரன் சனி
லக்கினத்திற்கு மூன்றாம் அதிபதியும் சனியும் சேர்க்கை பெற்றிருந்து இவர்களின் திசாபுத்தி நடந்தால் உடல் & உயிருக்கும் பாதிப்பை தரும்.
கோச்சார நிலைகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் .
✍ )
லக்கினாதிபதியும்
ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க
இவர்களுடன் ராகு சேர்க்கை பெற்றிருந்தால் அதிகமான மருந்தை சாப்பிட்டு மரணத்தை அடைவர்கள்.
✍) லக்கினாதிபதியும் ஆறாம் அதிபதியும் சேர்ந்திருக்க இவர்களுடன் சனி சேர்ந்தால்.
தண்ணீரால் மரணத்தை அடைவர்கள்.
✍ )
ஐந்தாம் அதிபதி,
மூன்றாம் அதிபதி, லக்கினாதிபதி
மூவரும் சேர்ந்து இவர்களுடன் ராகு அல்லது கேது சேர்ந்திருந்தால் கயிற்றில் தூக்குப் போட்டுக் கொண்டு மரணத்தை அடைவார்கள்.
✍ )
மகரம் மற்றும் கும்பம் நான்காம் வீடாக அமைந்து அதில் சந்திரன் இரண்டு பாவிகளுடன் இருந்தால்..
கயிற்றில் தூக்குப் போட்டடு இறந்து விடுவான்.
சொர்க்கமும் நரகமும் எங்குள்ளது?
குரு ஒருவருக்கு பேரழகியான ஒரு மகள் இருந்தாள். அதனால் அவளை திருமணம் முடிக்க பலர் போட்டி போட்டனர்.
அவர் தன் மகளை மணம் முடிக்க போட்டி போட்டவர்களிடம் " நான் இரண்டு கேள்விகள் கேட்பேன். அதற்கு சரியான பதில் சொல்பவருக்கே எனது மகள்" என்று சொன்னார்.
மறுநாள் போட்டியாளர்கள் அனைவரும் குரு வீட்டில் கூடி இருந்தனர்.
குரு அவர்களைப் பார்த்து " உலகிலே இனிமையான ஒரு பொருளை கொண்டு வாருங்கள்" என்று சொன்னார்.
மறுநாள் எல்லோரும் ஆளுக்கொரு பொருளை கொண்டு வந்தனர்.
ஒருவன் தேனைக் கொண்டுவந்தான்.
இன்னொருவன் கரும்பைக் கொண்டு வந்தான். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு இனிமையான பொருளைக் கொண்டு வந்திருந்தனர்.
வரிசையில் கடைசியாக குருவின் ஒரு ஏழை சிஷ்யனும் நின்டிருந்தான்.
குரு அவனைப் பார்த்து "நீயுமா" என்று ஆச்சரியமாக கேட்டார்.சீடன் "நான் உங்கள் மகளைக் காதலிக்கிறேன்" என்று சொன்னான்.
குரு "நீ என்ன கொண்டு வந்திருக்கிறாய்" என்று கேட்டார்.
சீடன் தான் கொண்டு வந்திருந்த சிறிய பெட்டியை திறந்து காட்டினான்.
அதனுள் ஒரு ஆட்டின் நாக்கு இருந்தது.
குரு அதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குரு "என்ன இது எதற்காக இதை கொண்டு வந்தாய்" என்று கேட்டார்,
சீடன் " குருவே நீங்கள் உலகிலேயே இனிமையான பொருளை கொண்டுவர சொன்னீர்கள். நாவை விட உலகில் சிறந்த பொருள் வேறு ஏது?
மனிதனுடைய நாவை கொண்டு வர முடியவில்லை. அதனால் தான் குறியீடாக ஆட்டின் நாவை கொண்டுவந்தேன். நாவில் இருந்து தான் இனிமையான சொற்கள் வருகின்றன. அதை சோகத்தில் இருப்பவன் கேட்டால் சந்தோசம் அடைகிறான். நோயாளி கேட்டால் குணம் அடைகிறான்." என்றான்.
குரு " இதில் நீ வெற்றி அடைந்தாய். வாழ்த்துகள் " என்று சொன்னார்
சீடன் "அடுத்த கேள்வி என்ன" என்று கேட்டான்.
குரு " உலகிலேயே கசப்பான ஒரு பொருளை கொண்டு வரவேண்டும் " என்று சொன்னார்.மறுநாள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கசப்பான பொருளை கொண்டு வந்தனர்.
ஒருத்தன் வேப்பங்காயை கொண்டு வந்தான், இன்னொருவன் எட்டிக்காயை கொண்டு வந்தான்.
கடைசியாக சீடன் வந்தான். அவன் கையில் அதே பெட்டி. அவன் அதை திறந்து காட்டினான். அதே போல ஆட்டின் நாக்கு.
குரு " என்ன விளையாடுகிறாயா? இனிமையான பொருளை கேட்டேன் நாவை கொண்டு வந்தாய்.
கசப்பான பொருளை கேட்டதற்கும் நாவை கொண்டு வந்து இருக்கிறாயே? என்ன அர்த்தம்?" என்று கேட்டார்.
சீடன் " தீய சொற்களை பேசும் நாவை போல கசப்பான பொருள் உலகில் உண்டா? அதில் இருந்து வரும் சொற்களைக் கேட்டால் மகிழ்ச்சியாய் இருப்பவனும் துயரம் கொள்கிறான்.
நட்பாக இருப்பவனும் பகையாக மாறுகிறான். எனவே நாவு தான் உலகிலேயே கசப்பான பொருள்" என்று சொன்னான்.
சீடனின் அறிவைக் கண்டு வியந்த குரு தான் மகளை அவனுக்கே மணம் முடித்துக் கொடுத்தார்.
நாவு ஒரு அற்புத சாவி.
சொர்கத்தின் திறவுகோலும் அது தான்.
நரகத்தின் வாசல் சாவியும் அது தான்.